கோவை மாநகரில் 14 பெண் காவலர்களுக்கு கனரக வாகன ஓட்டுநர் உரிமம் - டிஜிபி சைலேந்திர பாபு வழங்கினார்!

தமிழக காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு கோவை மாநகர காவல்துறையில் பெண் காவலர்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கலந்து கொண்டு, கனரக வாகன பயிற்சி முடித்த 14 பெண் காவலர்களுக்கு ஓட்டுனர் உரிமத்தை வழங்கினார்.



கோவை: கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றும் 14 பெண் காவலர்களுக்கு கனரக வாகன ஓட்டுநர் உரிமத்தை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வழங்கினார். 

தமிழக காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு கோவை மாநகரில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் காவல்துறையில் பெண்கள் இல்லாத பிரிவுகளில் இணைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர்களில் கனரக வாகனம் ஓட்ட விருப்பமுள்ள காவலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களுக்கு காவல்துறை சார்பில் பயிற்சியும் வழங்கப்பட்டது. அந்த பயிற்சியில் காவல்துறை பேருந்து, வஜ்ரா வாகனம் உள்ளிட்ட அனைத்து வகை கனரக வாகனங்களும் ஓட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. 

இந்த பயிற்சிகள் நிறைவடைந்த நிலையில் கனரக வாகனங்கள் ஓட்டி பயிற்சி பெற்ற 14 பெண் காவலர்களுக்கு பேட்ச் போடப்பட்ட ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதனை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பெண் காவலர்களுக்கு வழங்கினார். 

அதேபோல மோப்பநாய் பிரிவில் இணைக்கப்பட்டுள்ள இரண்டு இளம் பெண் பட்டதாரி பெண் காவலர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...