கோவை போத்தனூர் ரயில் நிலைய மின்கம்பத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!

கோவை போத்தனூர் ரயில் நிலைய நடைமேடை அருகேயுள்ள மின்கம்பத்தில் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: போத்தனூர் ரயில்வே நடைமேடை அருகே மின்கம்பத்தில் தூக்கிய தொங்கிய நிலையில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

போத்தனூர் ரயில் நிலைய பிளாட்பார்ம் அருகே உள்ள ரயில்வே மின் கம்பத்தில் அடையாளம் தெரியாத நபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதாக அங்கிருந்தவர்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். 



இதனையடுத்து அங்கு விரைந்து வந்த போத்தனூர் ரயில்வே போலீசார், மின் கம்பத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் தூக்கில் தொங்கியவர் யார்? எதற்காக வந்தார்? எப்போது சம்பவம் நடந்தது? என்பது குறித்து ரயில்வே போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முதல் கட்டமாக நடைமேடையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

Newsletter

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...