கோவையில் 500 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற நபர் கைது - போலீசார் விசாரணை!

கோவை - பாலக்காடு சாலையில் உள்ள சுகுணாபுரம் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையின் போது வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில் 500 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: கோவை அடுத்த சுகுணாபுரம் பகுதியில் 500 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற நபரை குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறை தலைவராக காமினி பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதிலும் பொது விநியோக திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் இன்று காலை 5 மணிக்கு கோவை - பாலக்காடு சாலையில் சுகுணாபுரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.



அப்போது, அவ்வழியாக வந்த TN 09 D 0909 என்ற பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் தமிழக அரசால் பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தலா 25 கிலோ எடை கொண்ட 20 வெள்ளை நிற மூட்டைகள் என மொத்தம் 500 கிலோ ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது.



இதனையடுத்து வாகன உரிமையாளரான கோவை தெற்கு உக்கடம் பகுதியை சேர்ந்த அஜ்மல் (19) என்பவரை கைது செய்து விசாரணை செய்தபோது இவர் உக்கடம் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவில் உள்ள கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தி சென்றது தெரியவந்தது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபரை போலீசார் நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...