கோவையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்!

கோவை மேட்டுப்பாளையம் அடுத்த சிக்காரம்பாளையத்தை சேர்ந்த பிரபு என்பவர் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்கள் ஆகிய உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு, 3 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.



கோவை: கோவையில் விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு மூன்று பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிக்காரம்பாளையத்தை சேர்ந்தவர் பிரபு (40). இவர், கடந்த 24 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி தலையில் படுகாயம் அடைந்தார். 

இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக அவர், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு மூளை சாவு அடைந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். 

இந்நிலையில், பிரபுவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் முன் வந்தனர். இதனையடுத்து, பிரபுவின் கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டன. இதன் மூலம் மூன்று பேர் மறுவாழ்வு பெற்றனர். 

இது தொடர்பாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறியதாவது, தானம் செய்தவரின் உடல் உறுப்புகள் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி, ஒரு சிறுநீரகம் கோவை அரசு மருத்துவமனை உள்நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனை உள் நோயாளிக்கும், கல்லீரல் கோவையில் தனியார் மருத்துவமனை நோயாளிக்கும் தானமாக வழங்கப்பட்டது. 

உடல் உறுப்புகளை தானமாக வழங்கியவரின் குடும்பத்தினருக்கு மருத்துவமனை முதல்வர் நன்றி தெரிவித்தார்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...