உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் ரூ.36.3 கோடி சொத்து மற்றும் வங்கிக் கணக்கை முடக்கிய அமலாக்கத்துறை!

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள், வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34.7 லட்சத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. ரூ.1 கோடிக்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.



சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34.7 லட்சத்தையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 

சென்னை தியாகராயநகர் விஜயராகவா சாலையில் உள்ள வணிக வளாகத்தில் செயல்படும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், சட்ட விரோதப் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதனடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள், அந்நிறுவனத்துக்கு சொந்தமான 8 இடங்களில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனர். 

இதேபோல, தமிழக அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பெயரில் உள்ள அறக்கட்டளை நிர்வாகியும், வழக்குரைஞருமான பாபுவுக்கு சொந்தமான எழும்பூர் எத்திராஜ் கல்லூரி சாலையில் உள்ள அலுவலகத்திலும் அமலாக்கத் துறையினர் சோதனை செய்தனர். சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

அமலாக்கத் துறையினர் விடுத்த அழைப்பை ஏற்று பாபு, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் கடந்த 24ஆம் தேதி நேரில் ஆஜரானார். அவரிடம், சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34.7 லட்சத்தையும் அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. 

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை ரூ.1 கோடி அளவுக்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமலாக்கத் துறை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

707 Kg of Banned Gutka Products Seized in Palladam; Two Arrested

Palladam police seized approximately 707 kilograms of banned gutka products allegedly transported from Karnataka into Ta...

பல்லடத்தில் 707 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 707 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர...

கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்க...

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...