கோவையில் பாதுகாப்பு பணியில் இருந்த சி.ஆர்.பி.எப் வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை - பரபரப்பு!

தூத்துக்குடியை சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் ஜெகன், துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போது, குடும்ப பிரச்சினையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த சிஆர்பிஎஃப் வீரர் குடும்ப பிரச்சினை காரணமாக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் பெருமாள் குளத்தை சேர்ந்தவர் ஜெகன் (32). இவர், துடியலூர் அடுத்துள்ள கதிர்நாயக்கன் பாளையத்தில் அமைந்துள்ள மத்திய ரிசர்வ் பயிற்சி கல்லூரியில் (சி.ஆர்.பி.எப்) பாதுகாப்பு பணியில் (கோட்டர் கார்டு காப்பு அலுவலில்) ஈடுபட்டு வந்துள்ளார். இவர் 77 பட்டலியன் ஏ கம்பெனியில் பணியாற்றி வந்தார். 

இதனிடையே இவரது முதல் மனைவியுடனான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் 2வது திருமணம் செய்துள்ளார். இதன் காரணமாக குடும்ப பிரச்சனை பெரிதாகி உள்ளதாக தெரிகிறது. 

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த அவர் இன்று மதியம் பாதுகாப்பு பணியில் இருந்தபோது, தனக்குத்தானே எஸ்.எல்.ஆர் துப்பாக்கியால் 2 ரவுண்டு கழுத்தில் சுட்டுக்கொண்டார். அவர் சுட்டபோது குண்டு கழுத்தில் இருந்து தலையின் வழியாக சென்றுள்ளது.



இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்த தகவலின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம், துடியலூர் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.



இதனை தொடர்ந்து ஜெகனின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெகன் சுட்டுக்கொண்ட துப்பாக்கியையும் பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...