பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவியேற்றதற்கு பின் உள்ள மர்மம் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என தம்பிதுரை பேட்டி

ஜெயலலிதாவின் உடல் அடக்கத்திற்கு முன்பாக ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவியேற்றதற்கு பின் உள்ள மர்மம் குறித்து அவர் விளக்கமளிக்க வேண்டும் என நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியதாவது:-

நீட் தேர்வு மற்றும் நெடுவாசல் பிரச்சனைகள் மாநில அரசின் பிரச்சனைகள் எனவும் இதில் தாம் கருத்து கூற எதுவுமில்லை எனவும் கூறிய தம்பிதுரை, நீட் தேர்வினை ரத்து செய்வது குறித்து தமிழக அரசு மத்திய அரசிடம் பேசி வருகின்றது எனவும் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து நட்புறவுடன் செயல்படுகிறது எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.

அண்ணா இறந்த போது அவரது உடல் அடக்கம் செய்த பின்னரே காபந்து முதலமைச்சராக நெடுஞ்செழியன் பொறுப்பேற்றார் எனவும், ஆனால் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யும் முன்பாக பன்னீர்செல்வம் எதற்காக முதலமைச்சர் பதவி ஏற்றார் என அவர் விளக்கவேண்டும் எனவும் தம்பிதுரை தெரிவித்தார்.

அ.தி.மு.க.வில் அணிகள் எதுவும் இல்லை என கூறிய அவர், பொதுச் செயலாளராக சசிகலா நீடித்து வருவதாகவும் தெரிவித்தார். 

சசிகலாவிற்கு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள நோட்டிஸிற்கு டிடிவி தினகரன் பதிலளித்துள்ளது சரியான நடைமுறை தான் எனவும், பொதுக்குழுவில் அனைவரும் கையெழுத்திட்டு சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தற்போது அதனை எதிர்ப்பது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஏற்பட்டது இயற்கை மரணம் தான் எனக்கூறிய தம்பிதுரை இதில் மர்மம் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...