கோவை பெரிய தடாகம் பிரிவில் உள்ள பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் பழைய இரும்புகளை திருடிய சின்ன தடாகம் குட்டவழி பகுதியை சேர்ந்த பாபு மற்றும் பிரசாந்த் ஆகிய இருவரையும் தடாகம் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை: பெரிய தடாகம் பிரிவு அருகே செங்கல் சூளையில் பழைய இரும்புகளை திருடிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கோவை பெரிய தடாகம் பிரிவு பகுதியில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான கே.பி.எஸ் சேம்பர்ஸ் என்ற பெயரில் செங்கல் சூளை செயல்பட்டு வருகிறது. இந்த சூளையானது தற்போது நீதிமன்ற உத்தரவினால் செயல்படாமல் உள்ளது.

இந்த நிலையில் அவரது செங்கல் சூளையில் இருந்த பழைய இரும்புகள் காணாமல் போயிருந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பாலமுருகன் தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், செங்கல் சூளையில் இருந்த பழைய இரும்புகளை திருடியதாக சின்ன தடாகம் குட்டவழியை சேர்ந்த பாபு மற்றும் பிரசாந்த் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.