கோவை அருகே செங்கல் சூளையில் பழைய இரும்புகள் திருட்டு - இருவர் கைது!

கோவை பெரிய தடாகம் பிரிவில் உள்ள பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் பழைய இரும்புகளை திருடிய சின்ன தடாகம் குட்டவழி பகுதியை சேர்ந்த பாபு மற்றும் பிரசாந்த் ஆகிய இருவரையும் தடாகம் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


கோவை: பெரிய தடாகம் பிரிவு அருகே செங்கல் சூளையில் பழைய இரும்புகளை திருடிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கோவை பெரிய தடாகம் பிரிவு பகுதியில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான கே.பி.எஸ் சேம்பர்ஸ் என்ற பெயரில் செங்கல் சூளை செயல்பட்டு வருகிறது. இந்த சூளையானது தற்போது நீதிமன்ற உத்தரவினால் செயல்படாமல் உள்ளது.



இந்த நிலையில் அவரது செங்கல் சூளையில் இருந்த பழைய இரும்புகள் காணாமல் போயிருந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பாலமுருகன் தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், செங்கல் சூளையில் இருந்த பழைய இரும்புகளை திருடியதாக சின்ன தடாகம் குட்டவழியை சேர்ந்த பாபு மற்றும் பிரசாந்த் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...