பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது என சிஐஐ தலைவர் நாராயணன் தகவல்

பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது என சிஐஐ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிஐஐ தலைவர் நாராயணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஜிடிபி குறித்த அறிக்கையின் படி இந்தியாவின் பொருதாராம், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகும் சிறந்த வளர்ச்சி அடைந்துள்ளது. 

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜிடிபி அறிக்கையின் படி 2017 ஆம் பொருளாதார ஆண்டில் பொருளாதாரம் சுமாரான வளர்ச்சியை அடைந்துள்ளது. நம்முடைய நாட்டின் வளர்ச்சியின் விகிதம் 7 சதவிகிதம் என்ற அளவிலேயே உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பாதிப்புகளை நாம் கடந்துகொண்டிருக்கிறோம். வரும் காலங்களில் இன்னும் அதிகமான வளர்ச்சி விகிதங்களை எட்டுவோம். பெரும்பாலான பெரு நிறுவனங்கள் தங்களுடைய பரிவர்த்தனைகளை பணம் இல்லாமல் செய்யக் கூடிய வகையில் மாற்றி அமைத்துக்கொண்டுள்ளனர். இது எதிர்வரும் காலங்களில் பொருளாதாரத்தில் மிகுந்த முன்னேற்றங்களை கொண்டு வரும். 

நுகர்வோர்கள் டிஜிட்டல் மற்றும் பணமில்லா பரிவர்த்தனை செய்வது எவ்வளவு எழிதானது என்பது குறித்து உணர்ந்துள்ளனர். பெரும்பாலானவர்கள் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறிவிட்டனர். கிராமப்புரங்களிலும் மக்கள் இப்பரிவர்த்தனை முறைக்கு மாறிவிட்டனர். பல்வேறு துறைகளில் இருந்து வரும் தகவல்களின் படி விற்பனை குறைந்திருந்தாலும் தற்பொழுது அது மீண்டும் நல்ல நிலையை நோக்கி திரும்பியுள்ளது. இந்நடவடிக்கையில் குறைவாக பாதிக்கப்பட்ட மற்றொரு துறை விவசாயம். ராபி பருவகால அறுவடை குறித்து மிகுந்த கவலை நிலவியது. ஆனால் தற்போது வெளியிடப்பட்ட தகவலின் படி விவசாய உற்பத்தி சாதனை அளவுகளை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நம்முடைய கவனத்தை தற்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் இருந்து தொழில் செய்வதில் எழிமை, மேக் இன் இந்தியா திட்டம் ஆகியவற்றின் மீது செலுத்த வேண்டும். அவை நம்முடைய வளர்ச்சியை அதிகரிக்கவும், நாட்டின் மீதுள்ள நமது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய உதவிகரமாக இருக்கும்.

இப்பொருளாதாரம் முன்னேற்றப்பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. வெளிப்புற சூழல்களில் இருந்து நமக்கு உதவி கிடைக்குமானால் 2018ஆம் ஆண்டில் நமது பொருளாதார வளர்ச்சி மிகச் சிறந்த உயரத்தை எட்டும் என நாராயணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...