கோவை கிழக்கு மண்டலத்தில் தார்ச் சாலை, பள்ளி கட்டிட புனரமைப்பு பணிகள் குறித்து மேயர் கல்பனா நேரில் ஆய்வு!

கோ‌வை கிழக்கு மண்டலத்தில்‌ தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள்‌ உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ்‌ ரூ.88 லட்சம்‌ மதிப்பிட்டில்‌ நடைபெற்று வரும்‌ தார்‌ சாலை பணி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் குறித்து மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ ஆய்வு மேற்கொண்டு கட்டுமான பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க உத்தரவிட்டார்.



கோவை: கோவை கிழக்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் தார் சாலை பணிகள் மற்றும் மாநகராட்சி பள்ளி புனரமைப்பு பணிகள் குறித்து மேயர் கல்பனா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



கோவை‌ மாநகராட்சி, கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.6க்குட்பட்ட வீரியம்பாளையம்‌ முதல்‌ அன்னை பிள்ளையார்‌ கோவில்‌ வரை தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள்‌ உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ்‌ ரூ.88 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 1.300 கி.மீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவது குறித்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆய்வு மேற்கொண்டார்.



இதேபோல், நேரு நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்‌ ரூ.20 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ பள்ளி வகுப்பறைகள்‌ புனரமைக்கும்‌ பணிகள்‌ மற்றும்‌



கருப்பராயம் பாளையம்‌ மாநகராட்சி நடுநிலை பள்ளியில்‌ ரூ.28 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ பள்ளி வகுப்பறைகள்‌ புனரமைக்கும்‌ பணிகளையும் மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌, நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர் நேரு நகா்‌ மாநகராட்சி பள்ளியில்‌ பழுதடைந்த கழிவறைகளை புனரமைக்க உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்கவும்‌, கட்டுமான‌ பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடிக்க சம்பந்தப்பட்ட பொறியாளாருக்கு அறிவுறுத்தினார்‌.



அதனைத்தொடர்ந்து, வீரியம்பாளையம்‌ பகுதியில்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்த மேயர் கல்பனா, அப்பகுதியில்‌ தார்‌ சாலை மற்றும்‌ மழைநீர்‌ வடிகால்‌ அமைக்க உரிய திட்ட மதிப்பிடு தயாரிக்க பொறியாளருக்கு அறிவுறுத்தினார்‌.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...