கோவை பில்லூர் குடிநீர் திட்ட பிரதான குழாயில் நீர் கசிவு - சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரம்!

பில்லூர் குடிநீர் திட்டத்தின் மூலம் கோவை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முத்துக்கல்லார் பகுதியில் உள்ள இத்திட்டத்தின் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீர்கசிவு ஏற்பட்ட நிலையில், நேற்று அதனை சரி செய்யும் பணிகள் நடப்பதால், சிங்காநல்லூர்‌, ஒண்டிபுதூர்‌, பீளமேடு, செளரிபாளையம்‌ உள்ளிட்ட பகுதிகளில் நீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட முத்துக்கல்லார் பகுதியில் உள்ள பில்லூர் குடிநீர் திட்டத்தின் பிரதான குழாயில் நீர் கசிவை சரிசெய்யும் பணியின் காரணமாக சிங்காநல்லூர்‌, ஒண்டிபுதூர்‌ உள்ளிட்ட பகுதிகளில் நீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்கு குடிநீர்‌ வழங்கும்‌ பில்லூர்‌ குடிநீர்‌ திட்டம்‌ ॥-ல்‌ வெள்ளியங்காடு குடிநீர்‌ சுத்திகரிப்பு நிலையம்‌ முதல்‌ ராமகிருஷ்ணாபுரம்‌ மேல்நிலை‌ தொட்டி வரை உள்ள குடிநீர்‌ கொண்டு வரும்‌ பிரதான குழாயில்‌ முத்துக்கல்லார்‌ என்ற இடத்தில்‌ நீர்கசிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அதனை சரி செய்யும்‌ பணி இன்று (30.05.2023) நடைபெற்று வருவதன் காரணமாக பில்லூர்‌ திட்டம்‌ ॥-ன்‌ மூலம்‌ குடிநீர் விநியோகிக்கப்படும்‌ சிங்காநல்லூர்‌, ஒண்டிபுதூர்‌, பீளமேடு, செளரிபாளையம்‌, கணபதி, காந்திபுரம்‌, புலியகுளம்‌, ரத்தினபுரி, சித்தாபுதூர்‌ மற்றும்‌ உக்கடம்‌ ஆகிய பகுதிகளில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ இருக்காது.

பொதுமக்கள்‌ சிரமத்தினை பொறுத்து மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...