ரயில்வே நடைபாதை இடத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு

கோவை, ரயில் நிலையம் வளாகம் ரயில் பாதை அருகே உள்ள 17-வது வார்டு, கடலைக்கார சந்து 3-வது வீதி இந்திரா நகரில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் 50 குடியிருப்புகளும், 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்கள் அரசாங்க அடையாள அட்டைகள் உள்ளிட்ட வரி செலுத்துவதற்கான அனைத்தையும் வைத்துள்ளனர்.

இந்நிலையில், ரயில் நடைபாதை விரிவுபடுத்த அப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற ரயில்வே நிர்வாகம் சார்பில் கடந்த ஜனவரி மாதம் இறுதி நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றுவதற்கு வந்தபோது, அப்பகுதி குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், சேலம் கோட்ட ரயில்வே உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், 15 நாட்கள் ரயில்வேயிடம் கால அவகாசம் கேட்டு அதற்கான கடிதமும் எழுதி கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை தற்காலிகமாக ரயில்வே அதிகாரிகள் நிறுத்தினர். 

அதனைத் தொடர்ந்து, இன்று தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜூனன் முயற்சியில் 72-வது வார்டு பகுதியில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி வெள்ளலூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இவர்கள் வசிப்பதற்கான இருப்பிட உரிமைச் சான்றிதழ்களை 48 குடும்பங்களுக்கு வழங்கினார். உடன், குடிசை மாற்றுவாரியம் மண்டல பொறியாளர் ராஜசேகரன், கவுன்சிலர் சசிரேகா ஆகியோர் உள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...