பொள்ளாச்சி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது - 2.80 கிலோ கஞ்சா பறிமுதல்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஹக்கீம் (39) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 2.80 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.



கோவை: பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக ஆனைமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் ஆனைமலை போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ஆனைமலை ஆற்றுப்பாலம் அருகே கஞ்சாவுடன் வலம் வந்த ஹக்கீம் (39) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 2.80 கிலோ கஞ்சா, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பொள்ளாச்சியை சேர்ந்த ஹக்கீம் ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை வாங்கி வந்து அதனை ஆனைமலை பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...