நடப்பாண்டில் தமிழகத்தில் 1.1 கோடி மரங்கள்‌ நட காவேரி கூக்குரல்‌ இயக்கம்‌ இலக்கு!

உலக சுற்றுச்சூழல்‌ தினத்தை முன்னிட்டு தமிழகம்‌ முழுவதும்‌ 1.1 கோடி மரங்களை நடவு செய்ய ஈஷா யோகா மையத்தின், காவேரி கூக்குரல் இயக்கம் இலக்காக நிர்ணயித்துள்ளது. வரும் ஜூன் 5 ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் நடவு செய்யும் பணிகளை துவங்கவும் முடிவு.



கோவை: ஈஷா யோகா மையத்தின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் நடப்பாண்டில் தமிழகத்தில் 1.1 கோடி மரங்கள்‌ நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 25 வருடங்களாக சுற்றுச்சூழல்‌ மேம்பாட்டிற்கான பணிகளை செய்துவரும்‌ ஈஷா, காவேரி கூக்குரல்‌ திட்டத்தின்‌ மூலம்‌ தமிழக, கர்நாடக மாநிலத்தில்‌ காவிரி வடிநில பகுதிகளில்‌ உள்ள விவசாய நிலங்களில்‌, 242 கோடி மரங்களை நடுவது என்ற மாபெரும்‌ செயலை செய்து வருகிறது.

அதில்‌ தமிழகத்திற்கான இந்த ஆண்டின்‌ இலக்கு 1.1 கோடி மரங்கள்‌ நடுவது. அதில்‌ தற்போது நடவுக்காலம்‌ துவங்கியுள்ளதால்‌, மரக்கன்றுகள்‌ நடும்‌ பணியை ஈஷாவின் காவேரி கூக்குரல்‌ அமைப்பு மேற்கொண்டு வருகிறது.



அதன்படி, இந்தாண்டு காவேரி கூக்குரல்‌ இயக்கம்‌ மூலமாக, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, கடலார்‌, அரியலூர்‌, தர்மபுரி, சேலம்‌, நாமக்கல்‌, கரூர்‌, கோவை, திருப்பூர்‌, மதுரை, திண்டுக்கல்‌, தேனி, விருதுநகர்‌, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 36 மாவட்டங்கள்‌ மற்றும்‌ பாண்டிச்சேரியில்‌ ஜூன்‌ 4, 5 ஆகிய தேதிகளில்‌ மரக்கன்றுகள்‌ நடும்‌ விழாக்கள்‌ நடத்தப்பட உள்ளன.

இதன்மூலம்‌, சுமார்‌ 140 விவசாயிகளின்‌ நிலங்களில்‌ 1.6 லட்சம்‌ மரக்கன்றுகளை விவசாயிகள்‌ நட உள்ளனர்‌. குறிப்பாக, தேக்கு, செம்மரம்‌, சந்தனம்‌, வேங்கை, மலைவேம்பு, மகோகனி, ரோஸ்வுட்‌ போன்ற பண மதிப்புமிக்க டிம்பர்‌ மரங்களை விவசாயிகள்‌ தங்களின்‌ பொருளாதார தேவைகளுக்காக நடவுள்ளனர்‌. 

இதுதவிர சைக்கிள்‌ பயணம்‌, மாரத்தான்‌, விழிப்புணர்வு வாசகங்கள்‌ ஏந்தி ஊர்வலங்கள்‌ என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ பல்வேறு நிகழ்ச்சிகளும்‌ நடைபெறவுள்ளது.

மண்ணுக்கேற்ற மரங்களை தேர்வு செய்வதில்‌ தொடங்கி எந்தெந்த மரங்களுக்கு எவ்வளவு இடைவெளி விட்டு நட வேண்டும்‌ என்பது வரை முழுமையான ஆலோசனைகளை காவேரி கூக்குரல்‌ இயக்க தன்னார்வலர்கள்‌ விவசாயிகளின்‌ நிலங்களுக்கே நேரில்‌ சென்று இலவசமாக வழங்கி வருகின்றனர்‌. விவசாயிகளுக்கான மரக்கன்றுகளை மிகக்குறைந்த விலையான 3 ரூபாய்க்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின்‌ பெரும்பாலான மாவட்டங்களில்‌ சட்டமன்ற உறுப்பினர்‌, மேயர்‌, தொழிலதிபர்கள்‌, சமூக ஆர்வலர்கள்‌, மாணவர்கள்‌, பொதுமக்கள்‌ என சமூக அக்கறையுள்ள பலரும்‌ இந்நிகழ்ச்சிகளில்‌ தன்னார்வத்தோடு பங்கெடுக்கின்றனர்‌.

இதற்கு முன்பு வேளாண்‌ விஞ்ஞானி நம்மாழ்வார்‌, நெல்‌ ஜெயராமன்‌, மரம்‌ தங்கசாமி ஆகியோரின்‌ நினைவு மற்றும்‌ பிறந்த நாட்களில்‌ இதேபோல்‌, லட்சக்கணக்கில்‌ மரக்கன்றுகள்‌ நடும்‌ பணியை காவேரி கூக்குரல்‌ இயக்கம்‌ முன்னெடுத்தது. இவர்கள்‌ மூவரும்‌ ஈஷாவின்‌ பல்வேறு சுற்றுச்சூழல்‌ பணிகளில்‌ ஆரம்பம்‌ முதல்‌ உறுதுணையாக இருந்து வழிகாட்டிகளாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

காவேரி கூக்குரல்‌ இயக்கமானது காவேரி நதிக்கு புத்துயிர் ஊட்டுவதற்காகவும்‌, அதை சார்ந்துள்ள விவசாயிகளின்‌ பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும்‌ சத்குரு அவர்களால்‌ 2019-ம்‌ ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வியக்கத்தின்‌ மூலம்‌ இதுவரை 4.4 கோடி மரங்களை விவசாயிகள்‌ தங்கள்‌ நிலங்களில்‌ நடவு செய்துள்ளனர்‌.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...