சின்னதடாகம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியின் இளநிலை உதவியாளர் சரவணகுமார், இடைநீக்கம் செய்யப்பட்டு பிழைப்பூதியம் பெற்று வந்த நிலையில், கடந்த 5 மாதமாக பிழைப்பூதியம் வழங்கப்படாததை கண்டித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கோவை: பிழைப்பூதியம் வழங்க கோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், இளநிலை உதவியாளர் ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார். இவர் சின்ன தடாகம் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு பள்ளியில் சமச்சீர் அல்லாத புத்தகம் காணாமல் போனதாக வழக்கு பதியப்பட்டு தற்போது வழக்கு நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து சரவணக்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் 2022 ஆம் ஆண்டு 50 சதவீதம் பிழைப்பு ஊதியம் பெற்று வந்தார். ஆனால் தற்பொழுது 2023 ஜனவரி முதல் இன்று வரை பிழைப்பு ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஐந்து மாதம் பிழைப்பு ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.