கோவை எஸ்.பி தலைமையில் காவலர்களுக்கான குறைதீர்ப்பு முகாம்!

கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் தலைமையில் கோவை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் காவலர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், சட்டம் ஒழுங்கு, ஆயுதப்படை உள்ளிட்ட காவலர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக எஸ்.பி-யிடம் அளித்தனர்.



கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.



கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், தலைமையில் கோவை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர் முதல் சார்பு ஆய்வாளர் வரை உள்ள காவல் துறையினருக்கு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. 



இக்குறைதீர்க்கும் முகாமில் காவல்துறையினர் சுமார் 183 பேரிடம் காவல் கண்காணிப்பாளர் குறைகளைக் கேட்டறிந்தும், அவர்களிடம் இருந்து குறைதீர்க்கும் மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.



அம்மனுக்களை பெற்றுக் கொண்டு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அமைச்சுப் பணியாளர்களுக்கு உத்தரவு வழங்கினார். 



மேலும், மனுக்கள் மீது துரிதமான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...