வால்பாறை அருகே அருவியில் தவறி விழுந்த இளைஞர் உடல் மீட்பு!

வால்பாறை அருகே சுற்றுலா வந்த ஜாகர் (21) என்ற இளைஞர், பிர்லா அருவியில் புகைப்படம் எடுக்கும் போது தவறி விழுந்து மாயமானார். இவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், 5 நாட்களுக்கு பிறகு இளைஞர் ஜாகரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.



கோவை: வால்பாறைக்கு சுற்றுலா வந்து அருவியில் புகைப்படம் எடுக்கும் போது நீரில் தவறி விழுந்து காணாமல் போன இளைஞர் உடல் 5 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ஜாஜூ என்பவரது மகன் ஜாகர் (21). இவர் தனது தோழியுடன் கடந்த 28ஆம் தேதி வால்பாறை பகுதியில் சுற்றி பார்த்துவிட்டு சோலையாறு எஸ்டேட் பகுதியில் உள்ள பிர்லா அருவிக்கு சென்றுள்ளனர்.

அங்கு அருவி அருகில் புகைப்படம் எடுக்க சென்றுள்ளனர். அப்போது கால் தவறி ஜாகர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக கூறப்படுகிறது.



அதைத்தொடர்ந்து காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும் அவருடைய உடலை தீவிரமாக தேடி வந்தனர். 



இந்நிலையில், 5 நாட்களுக்குப் பிறகு இன்று உடல் மீட்கப்பட்டது, அவருடைய உடலை வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வால்பாறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...