மாற்றுத்திறனாளி கைப்பந்து வீராங்கனைக்கு கோவை டி.ஐ.ஜி பாராட்டு!

நேபாள நாட்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச ஓபன் காத்மாண்டு அமர்வு கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் 2ஆம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீராங்கனைக்கு கோவை டிஐஜி விஜயகுமார் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.



கோவை: நேபாள நாட்டில் நடைபெற்ற மாறுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீராங்கனைக்கு கோவை டிஐஜி விஜயகுமார் பாராட்டினார். 

நேபாள நாட்டில், மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச ஓபன் காத்மாண்டு அமர்வு கைப்பந்து சாம்பியன்ஷிப் (International Open Kathmandu Sitting Volleyball Championship) போட்டி சமீபத்தில் நடைபெற்றது. 

இந்த போட்டியில், கோவை சரக அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டு, கோவையில் உள்ள இந்தியா பாரா வாலிபால் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் இந்திரா என்பவர் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். 

இதனை அறிந்த கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார், வெற்றி பெற்ற மாற்றத்திறனாளி கைப்பந்து வீராங்கனையை பாராட்டும் விதமாக கோவை காவல் சரக அலுவலகத்தில் வைத்து பாராட்டு நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...