துடியலூர் அரவான் திடலில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசமர விநாயகர் கோவில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. இதில், சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவை: துடியலூர் அரவான் திடலில் அமைந்துள்ள அரசமர விநாயகர் கோவில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது.
கோவை துடியலூர் அடுத்த ஆர் எஸ் ரோடு அரவான் திடலில் உள்ள அரச மர விநாயகர் கோவில் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாயந்ததாகும். இந்த கோவிலுக்கு பீடம் அமைத்து குடமுழுக்கு செய்ய ஊர் பொதுமக்கள் முடிவு செய்து அதற்கான பணிகள் நிறைவடைந்து. இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது.

அதிகாலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.