கோவை குறிச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை - ஆட்டோ ஓட்டுநர் கைது!

குறிச்சி அருகே லாட்டரி விற்பனை தொடர்பாக ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஆட்டோ ஓட்டுனர் பிரகாஷ் என்பவரை பிடித்து விசாரித்ததில் அவர், கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.



கோவை: கோவை மாவட்டம் குறிச்சி அருகே லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநரை போத்தனூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை குறிச்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் செல்போன் மூலமாக மூணு நம்பர் லாட்டரி விற்பனை நடப்பதாக போத்தனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

இதன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் ராக்கியப்பன் தலைமையிலான போலீசார் குறிச்சி காந்திஜி சாலை பகுதிக்கு ரோந்து சென்று கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோவில் சந்தேகத்திற்கிடமாக இருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் இருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில் பிடிபட்ட நபர் போத்தனூர் குருசாமி பிள்ளை வீதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் பிரகாஷ் (47) என்பதும், ஆட்டோ ஓட்டி வரும் பிரகாஷ் கேரளாவில் இருந்து லாட்டரிகளை வாங்கி வந்து குறிச்சி, சுந்தராபுரம் பகுதியில் விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் இவர், செல்போன் மூலம் மூணு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த 10 லாட்டரி சீட்டுகள், செல்போன், நோட்டுப் புத்தகம் ஆகியவற்றை பறிமுதல் செய்தபோலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...