பொள்ளாச்சி அருகே மூதாட்டியிடம் 2.5 சவரன் நகை பறிப்பு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

பொள்ளாச்சி அடுத்த பவானிசங்கர் வீதியை சேர்ந்த ரங்கநாயகி (72) கோவிலுக்கு நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், அவரது கழுத்தில் இருந்த நகையை பறித்துச் சென்ற நிலையில், புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.



கோவை: பொள்ளாச்சி அருகே கோவிலுக்கு நடந்து சென்ற மூதாட்டியின் கழுத்தில் இருந்த இரண்டரை சவரன் நகையை மர்மநபர்கள் இருவர் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த பவானி சங்கர் வீதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மனைவி ரங்கநாயகி (72). இவர் அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சுப்பு செட்டி வீதி வழியாக நடந்து சென்றுள்ளார். 

அப்போது மூதாட்டியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் இருவர் பின் தொடர்ந்து வந்துள்ளனர். அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் ரங்கநாயகி கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் செயினை பறித்தனர். அப்போது, அதிர்ச்சியடைந்த மூதாட்டி செயினை பிடித்து இழுத்துள்ளார். 

இதில், செயின் அறுந்த நிலையில், இளைஞர்கள் அவர்கள் கையில் கிடைத்த 2.5 பவுன் செயினுடன் தப்பிச் சென்றனர். இது குறித்து மூதாட்டி பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் செயினை பறித்து சென்ற இளைஞர்களை தேடி வருகிறார்கள்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...