திமுக செயற்தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தை அக்கட்சியினர் இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அவரது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு கோவை மாநகர திமுக சார்பில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த ரத்ததான முகாமிற்கு சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் நா.கார்த்திக் தலைமை வகித்தார்.

மேலும், கோவை தெற்கு மாநகர் மாவட்ட செயலாளர் நாச்சிமுத்து முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர்.
முன்னதாக நிக்ழச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் 'இங்கு தானம் செய்யப்படும் ரத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்' என்றார்.

முன்னதாக நிக்ழச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், 'இங்கு தானம் செய்யப்படும் ரத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்' என்றார்.