புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை சிவானந்தகாலனி பகுதியில் மீத்தேன் திட்டத்திற்கு ஏதிரான மாணவர் இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீத்தேன் திட்டத்தை ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் மத்திய அரசு தமிழகத்தில் திணிக்க முயற்சிப்பதாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளாமல் போராட்டத்தை சமரசப்படுத்தும் நடவடிக்கையை மட்டுமே மேற்கொண்டு வருவதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்திய அவர்கள், இத்திட்டத்திற்கு ஏதிராக கல்லூரி மாணவர்களை இணைந்து தொடர் போராட்டங்களை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்திய அவர்கள், இத்திட்டத்திற்கு ஏதிராக கல்லூரி மாணவர்களை இணைந்து தொடர் போராட்டங்களை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
