கோவையில் இருந்து ரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்த முயற்சி - 2 பெண்கள் கைது

கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசியை கடத்திச் செல்ல முயன்ற கோவையை சேர்ந்த அமுதா (40) மற்றும் கேரளாவை சேர்ந்த ஜோதி (62) ஆகியோரை கைது செய்த குடிமைப் பொருள் வழங்கல் துறையினர், அவர்களிடம் இருந்து 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர்.



கோவை: போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்தப்பட இருந்த 300 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறை தலைவர் காமினி உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதிலும் பொது விநியோக திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

இதன்படி, கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி ரயில்கள் மூலம் அரிசி கடத்தும் நபர்களை பிடிக்க உத்தரவிட்டதன் பேரில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் நேற்று (05.06.2023) காலை 08.00 மணிக்கு கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். 

இந்த சோதனையின் போது, நடைமேடை 3 ல் அடுக்கி வைத்திருந்த சுமார் 300 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை கைப்பற்றப்பட்டது.



மேலும், அதனை ரயிலில் கடத்த தயாராக இருந்த கோவையை சேர்ந்த அமுதா (40) மற்றும் கேரளாவை சேர்ந்த ஜோதி (62) ஆகியோரை கைது செய்தனர். 

தொடர்ந்து நடத்திய விசாரணையில், போத்தனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசிகளை குறைந்த விலைக்கு வாங்கி அதனை கேரளா செல்லும் ரயில்கள் மூலமாக கேரள கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததை ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...