கோவை புலியகுளம் பகுதியில் மாற்று அரசியலை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மண்டல பிரச்சார இயக்கத்தில் கலந்துக் கொண்ட சி.பி.எம் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசுகையில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை கேரள அரசு கைவிடவேண்டும் எனவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுதான் பிரச்சினைக்கு தீர்வு என வலியுறுத்தினார். ஈசா யோகா மையம் எல்லா விதமான விதி முறைகளையும் மீறியுள்ளது எனவும், விதி முறைகளை மீறி் செயல்பட்ட ஈசா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், ஈசா நிர்வாகிகள், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், உடந்தையாக இருந்த அமைச்சர்கள் என அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
நெடுவாசல் மக்கள் உணர்வுகளை மதிக்காமலும், மாநில அரசுசின் அனுமதி பெறாமல் மத்திய அரசு செயல்படுவது கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிரானது என குற்றம்சாட்டினார். நீட் தேர்வு இருக்கிறதா, இல்லையா என்ற கேள்விக்குறியோடு மாணவர்கள் இருப்பதால் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தெளிவுப்படுத்த வேண்டும் என்று வாசுகி வலியுறுத்தினார்.
நெடுவாசல் மக்கள் உணர்வுகளை மதிக்காமலும், மாநில அரசுசின் அனுமதி பெறாமல் மத்திய அரசு செயல்படுவது கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிரானது என குற்றம்சாட்டினார். நீட் தேர்வு இருக்கிறதா, இல்லையா என்ற கேள்விக்குறியோடு மாணவர்கள் இருப்பதால் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தெளிவுப்படுத்த வேண்டும் என்று வாசுகி வலியுறுத்தினார்.