மேட்டுப்பாளையம் அருகே வேளாண் துறை சார்பில் உழவர் தின விழா!

கோவை மேட்டுப்பாளையம் அடுத்த கண்டியூர் கிராமத்தில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வேளாண் துறை சார்பில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உழவர் தின விழா மற்றும் விவசாயிகளுடான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வேளாண் துறை சார்பில் உழவர் தின விழா மற்றும் விவசாயிகளுடான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் அடுத்த கெம்மாரம்பாளையம் ஊராட்சி கண்டியூர் கிராமத்தில் தமிழக அரசின் வேளாண் துறை சார்பில் வேளாண்மை விரிவாக்க துணை இயக்கம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, விரிவாக்க சீரமைப்பு திட்டம் இணைந்து உழவர் தின விழா மற்றும் விவசாயிகளுடான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் கலந்து கொண்டார். காரமடை வேளாண்மை உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி வரவேற்றார். கெம்மாரம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா பொன்னுச்சாமி முன்னிலை வகித்தார்.

கோவை வேளாண்மை இணை இயக்குனர் முத்துலட்சுமி, வேளாண்மை துணை இயக்குனர் வெங்கடாசலம், மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் வேளாண் காடுகள் வணிக மன்றத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துபெருமாள், காரமடை வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் சுரேஷ்குமார் ஆகியோர் பேசினர்.

நிகழ்ச்சியில் காரமடை தோட்டக்கலை உதவி இயக்குனர் சுசீந்திரா, என்ஜீனியரிங் துறை உதவி பொறியாளர் ஹசீனா, கால்நடை உதவி மருத்துவர் வருண், உதவி வேளாண்மை அலுவலர் ராமகிருஷ்ணன், பட்டு வளர்ச்சித்துறை இளநிலை ஆய்வாளர் சிவசங்கர், உதவி வேளாண்மை அலுவலர் சிவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...