கோவையில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை திருடிய நபர் கைது!

கோவை அன்னூரை சேர்ந்த முகமது அலிபகத் என்பவர் தனது வீட்டுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான சொகுசு பைக்கை திருடிச்சென்ற அப்துல் ரகுமான் (21) என்பவரை கைது செய்த போலீசார் திருடப்பட்ட சொகுசு பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே சொகுசு பைக்கை திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம், அன்னூரை சேர்ந்தவர் முகமது அலி பகத். இவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது அவரது இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாது நபர் திருடி சென்றுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு அன்னூர் போலீசார் பதிவு செய்தனர். இந்நிலையில் அன்னூர் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் பசூர் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை பிடித்து விசாரித்த போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். இதனால் அவரை காவல் நிலையம் அழைத்து விசாரித்த போது முகமது அலி பகத்-ன் இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற இளைஞர் என்பது தெரியவந்தது.

விசாரணையில் அவர் அப்துல் மஜ்கார் மகன் அப்துல் ரகுமான் (21) என்பதும், இரு சக்கர வாகனத்தை திருடி விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...