கோவையில் 2 புதிய மகளிர் காவல்நிலையங்களை திறந்து வைத்த டிஜிபி சைலேந்திரபாபு!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி மற்றும் வால்பாறை ஆகிய 2 பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அமைக்கப்பட்ட 2 புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்களை தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.

கோவை: கோவை மாவட்டத்தில் 2 புதிய அனைத்து மகளிர் காவல் நிலையத்தை காணொலி காட்சி வாயிலாக தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி மற்றும் வால்பாறை பகுதியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஏற்படுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.



இந்நிலையில், கோரிக்கையை ஏற்று மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை சரக டிஐஜி விஜயகுமார்  மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயாணன்  ஆகியோர் பரிந்துரையின் பேரிலும், தமிழக முதல்வர்  உத்தரவின் பேரிலும், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி மற்றும் வால்பாறை ஆகிய பகுதிகளில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டது.



இந்த காவல் நிலையங்களை காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு, காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை சரக  டிஐஜி விஜயகுமார், மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பத்ரிநாராயணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்நிகழ்வில் கருமத்தம்பட்டி மற்றும் வால்பாறை உட்கோட்ட‌ துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவலர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள ஆறு உட்கோட்டங்களிலும் மகளிர் காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

இதன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...