கோவையில் 2 புதிய மகளிர் காவல்நிலையங்களை திறந்து வைத்த டிஜிபி சைலேந்திரபாபு!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி மற்றும் வால்பாறை ஆகிய 2 பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அமைக்கப்பட்ட 2 புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்களை தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.

கோவை: கோவை மாவட்டத்தில் 2 புதிய அனைத்து மகளிர் காவல் நிலையத்தை காணொலி காட்சி வாயிலாக தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி மற்றும் வால்பாறை பகுதியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஏற்படுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.



இந்நிலையில், கோரிக்கையை ஏற்று மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை சரக டிஐஜி விஜயகுமார்  மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயாணன்  ஆகியோர் பரிந்துரையின் பேரிலும், தமிழக முதல்வர்  உத்தரவின் பேரிலும், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி மற்றும் வால்பாறை ஆகிய பகுதிகளில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டது.



இந்த காவல் நிலையங்களை காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு, காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை சரக  டிஐஜி விஜயகுமார், மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பத்ரிநாராயணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்நிகழ்வில் கருமத்தம்பட்டி மற்றும் வால்பாறை உட்கோட்ட‌ துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவலர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள ஆறு உட்கோட்டங்களிலும் மகளிர் காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

இதன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...