சமூக வலைத்தளத்தில் திமுக குறித்து அவதூறு பரப்பிய பாஜக ஆதரவாளர் கைது!

2021ஆம் ஆண்டு நடந்த கள்ளச்சாராய கைது சம்பவத்தை தற்போது நடைபெற்றதாகவும், திமுகவினர் கைது செய்யப்பட்டதாகவும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பாஜக ஆதரவாளரான சரவணபிரசாத் என்பவரை திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர்: சமூக வலைதளத்தில் தி.மு.க. குறித்து தவறான தகவல் பரப்பியதாக பா.ஜ.க. ஆதரவாளரை திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

பல்லடம் அடுத்த கரைப்புதூர் குன்னாங்கல்பாளையத்தை சேர்ந்த திமுக இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம் திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில் திருப்பூர் மாவட்டம் அவினாசி செம்பாக்கவுண்டம் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நேரத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக அவினாசி மதுவிலக்கு போலீசார் 2 பெண்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர்.

இதுகுறித்து தினசரி நாளிதழ்களில் கடந்த 28-5-2021 அன்று செய்தி வெளியானது. இந்தநிலையில் சரவணபிரசாத் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில், அவினாசியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய திமுகவினர் 5 பேர் கைது என்ற தலைப்பிட்ட செய்தியை பதிவு செய்துள்ளார்.

2 ஆண்டுகளுக்கு முன்பு வந்த செய்தியை தவறாக சித்தரித்து திமுக கட்சிக்கும், கட்சியினருக்கும் பொதுமக்கள் மத்தியில் களங்கப்படுத்தும் விதமாக திமுகவினர் கைது செய்யப்பட்டதை போல் தகவல் பரப்பிய சரவணபிரசாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சைபர் கிரைம் போலீசார் நேற்று சரவணபிரசாத்தை (52) கோவையில் கைது செய்தனர்.

இவர் காஞ்சிபுரம் அடுத்த பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்த இவர், பாஜக ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. சரவண பிரசாத் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் நேற்றிரவு திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல் தலைமையில் கட்சியினர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

மேலும், பொய் வழக்கு போட்டு சரவணபிரசாத் கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...