வால்பாறையை அடுத்துள்ள டாடா காபி நிறுவனத்திற்கு சொந்தமான பழைய வால்பாறை எஸ்டேட் பகுதியில் சுமார் 1 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை புலி ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது.

தகவல் அறிந்த வால்பாறை வனத்துறையினர் வால்பாறை வனச்சரக அலுவலர் சேகர் உத்தரவின் பேரில் வனப்பாதுகாவலர்கள் சந்திரன், முனியாண்டி, மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த சிறுத்தை புலியை கைப்பற்றி ரொட்டிகடை பகுதியில் உள்ள வனத்துறை பயிற்சி மையத்திற்கு கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கால்நடை மருத்துவர் வந்து உடல் கூறு பரிசோதனை செய்த பின் இறப்பு குறித்து தெரியும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த வால்பாறை வனத்துறையினர் வால்பாறை வனச்சரக அலுவலர் சேகர் உத்தரவின் பேரில் வனப்பாதுகாவலர்கள் சந்திரன், முனியாண்டி, மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த சிறுத்தை புலியை கைப்பற்றி ரொட்டிகடை பகுதியில் உள்ள வனத்துறை பயிற்சி மையத்திற்கு கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கால்நடை மருத்துவர் வந்து உடல் கூறு பரிசோதனை செய்த பின் இறப்பு குறித்து தெரியும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.