திருப்பூரில் சாய ஆலை நச்சு வாயுவால் குழந்தைகள் பாதிப்பு - எம்.எல்.ஏ, ஆட்சியர் நேரில் ஆய்வு!

திருப்பூர் வெங்கமேட்டில் உள்ள துணிகளை சாயம் ஏற்றும் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவால் குழந்தைகள் வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு ஆளான நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தைகளை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ செல்வராஜ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் உள்ள சாய ஆலையிலிருந்து நச்சு வாயு வெளியேறி குழந்தைகள் பாதிக்கப்பட்ட நிலையில், திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ செல்வராஜ் மற்றும் ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

வெங்கமேடு பகுதியில் துணிகளுக்கு சாயம் ஏற்றும் தனியார் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு துணிகளுக்கு சாயம் ஏற்றப்பட்ட பின்பு கழிவு நீரை சுத்தகரிக்காமல் வைக்கப்பட்டதால் நீரிலிருந்து வெளியேறிய நச்சு வாயுவால் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் உட்பட பெரியவர்களுக்கு வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகள் நேற்று இரவு முதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.



இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்த பின்பு இன்று காலை மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் அப்பகுதியில் உடல் உபாதைக்கு உள்ளான குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இச்சம்பவம் குறித்து அறிந்த திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் சம்பவ இடத்திற்கு வந்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட குழந்தைகளை தனது வாகனத்தின் மூலம் உடனடியாக தனியார் மருத்துவமனையில் முழு பரிசோதனை மேற்கொள்ள அனுப்பி வைத்தார்.



இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் கிரியப்பனவர், திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட பகுதி மற்றும் ஆலையில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர்.



இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் கூறியதாவது, முதற்கட்டமாக பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எந்த வித பாதிப்புகளும் ஏற்படாத நிலையில் இந்த பகுதி முழுவதுமே உள்ள அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் குற்றச்சாட்டுக்கு உள்ளான சம்பந்தப்பட்ட ஆலையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆலையின் கழிவு நீர் மற்றும் சுத்தகரிக்கப்பட்ட நீரினை ஆய்விற்காக எடுத்துச் சென்றனர். ஆய்வு முடிவுகள் வரும் வரை ஆலையை தற்காலிகமாக செயல்பட தடை விதித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...