கோவையில் உள்ள 2 தலைமை தபால் நிலையங்களில் 12 மணி நேர சேவை!

கோவை கூட்செட் ரோட்டில் உள்ள கோவை கோட்ட தலைமை தபால் நிலையம் மற்றும் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மேற்கு மண்டல தலைமை தபால் நிலையத்திலும் 12 மணி நேர சேவை துவங்கப்பட்டுள்ளது. இவ்விரு தபால் நிலையங்களும் காலை, 8:00 முதல், இரவு 8:00 மணி வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.



கோவை: கோவை கோட்ட தலைமை தபால் நிலையம் மற்றும் மேற்கு மண்டல தலைமை தபால் நிலையம் ஆகிய 2 தலைமை தபால் நிலையங்களில், 12 மணி நேர சேவை அமல்படுத்தப்பட்டுள்ளது.



கோவை கூட்செட் ரோட்டில் கோவை கோட்ட தலைமை தபால் நிலையமும், ஆர்.எஸ்.புரத்தில், மேற்கு மண்டல தலைமை தபால் நிலையமும் செயல்பட்டு வருகிறது. இங்கு, காலை 10:00 முதல் மாலை 3:00 மணி வரையில் சேமிப்பு வங்கி தொடர்பான சேவைகள் வழங்கப்பட்டன.

மாலை 4:00 மணி வரை மணி ஆர்டர் புக்கிங், இரவு 7:00 மணி வரை பதிவு தபால், பார்சல் விரைவு தபால் சேவைகள் வழங்கப்பட்டு வந்தன. வாடிக்கையாளர் வசதிக்காக, நேற்று முதல், இவ்விரு தலைமை தபால்நிலையங்களிலும், 12 மணி நேர சேவை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இனி காலை, 8:00 முதல், இரவு 8:00 மணி வரை, அனைத்து வகையான சேமிப்பு கணக்குகள், அஞ்சல் ஆயுள் காப்பீடு, பதிவு தபால், விரைவு தபால், பார்சல், வி.பி.எல்., வி.பி.பி., தபால் ஆகிய சேவைகளை, இவ்விரு தபால் நிலையங்களிலும் பொதுமக்கள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...