பல்லடம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது!

பல்லடம் சுற்றுவட்டார பகுதியான பொங்கலூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டையை சேர்ந்த ராஜா மற்றும் முனியசாமி, திருப்பூரை சேர்ந்த மலையரசன் ஆகியோரை அவிநாசிபாளையம் போலீசார் கைது செய்தனர். விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் அருகேயுள்ள பொங்கலூர் பகுதியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம், அவிநாசிபாளையம், காமநாயக்கன் பாளையம் மற்றும் மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடை மற்றும் பார்களில் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகின. 

இந்த நிலையில் அப்பகுதிகளில் போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தினர். கடந்த மூன்று நாட்களாக போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் நிலையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த மூன்று பேரை கைது செய்துள்ளனர். 



அதன்படி பொங்கலூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டையை சேர்ந்த ராஜா மற்றும் முனியசாமி, திருப்பூரை சேர்ந்த மலையரசன் ஆகியோரை அவிநாசிபாளையம் காவல்துறையினர் கைது செய்தனர். 



மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். 

பல்லடம் சரக காவல் துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கையால் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை குறைந்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கைகள் தொடர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...