கோவை தடாகம் அருகே நீரில் மூழ்கி சிறுவன் பலியான சோகம்!

தடாகம் அடுத்த நம்பர் 1 நாயக்கன்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த செங்கல் சூளைக்காக தோண்டப்பட்ட குழியில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த நீரில் குளித்து விளையாடிய ஹரீஸ் (14) என்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: தடாகம் அருகே சட்டவிரோதமாக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு உத்தரவை மீறி செங்கல் தயாரிக்க தோண்டப்பட்ட சட்ட விரோத பள்ளங்களால் வன விலங்குகள், கனிம வளங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே அங்கு தோண்டப்பட்ட பள்ளங்களையும் வெட்டி எடுக்கப்பட்ட செம்மண்ணை கொண்டு மூடவும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நம்பர் 1 நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் தோண்டப்பட்ட குழியில் மழைநீர் தேங்கி இருந்தது.

இந்நிலையில் சாந்திமேடு பகுதியை சேர்ந்த 5 பள்ளி சிறுவர்கள் அந்த குழியில் இருந்த மழைநீரில் குளித்து விளையாடியுள்ளனர். பின்னர் அனைவரும் வெளியே வந்த போது வேல்முருகன் என்பவரது மகன் ஹரீஸ் (14) , நீரில் இருந்த கட்டை ஒன்றை எடுக்க முயன்றதாக தெரிகிறது.



சிறுவனுக்கு நீச்சல் தெரியாததால் எதிர்பாராத விதமாக அங்கிருந்த 10 அடி ஆழ நீரில் சிறுவன் மூழ்கியுள்ளார். சக சிறுவர்கள் அங்கிருந்த பெரியவர்களிடம் கூறிய பின்னர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, அங்கு வந்த பெரியநாயக்கன் பாளையம் போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் சிறுவன் ஹரீஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அதே பகுதியில் வன விலங்குகளின் எச்சமும் கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் நில உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...