கோவை வேளாண் பல்கலையில் பட்டயப்படிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில்‌ பட்டயப்படிப்புகளுக்கான விண்ணப்பத்தை ‌ சமர்ப்பிப்பற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில், ஜூலை 1 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில்‌ பட்டயப்படிப்புகளுக்கான விண்ணப்பத்தை ‌ சமர்ப்பிப்பற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தால்‌ வழங்கப்படும்‌ பட்டயப்படிப்புகள்‌.

இந்த கல்வியாண்டில்‌ வேளாண்மை (ஆங்கில வழி), வேளாண்மை (தமிழ்வழி) தோட்டக்கலை மற்றும்‌ வேளாண்மை பொறியியல்‌ ஆகிய பட்டயப்படிப்புகளுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டு வருகின்றன.

மாணவர்கள்‌ தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்வதற்கான கடைசி தேதி 09.06.2023 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

இணையதளம்‌ மூலமாக பட்டயப்படிப்புகளுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்‌ கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும்‌ என்ற கோரிக்கை பெற்றோர்‌ மற்றும்‌ பொதுமக்களிடம் இருந்து தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தால்‌ பெறப்பட்டு வருகிறது.

ஆகையினால்‌ வேளாண்மை (ஆங்கிலவழி), வேளாண்மை (தமிழ்வழி) தோட்டக்கலை மற்றும்‌ வேளாண்மை பொறியியல்‌ ஆகிய பட்டயப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வசதியாக இணையதளம்‌ மூலமாக விண்ணப்பித்தை பதிவேற்றுவதற்கான கடைசி தேதி 01.07.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதார்கள்‌ தங்களின்‌ விண்ணப்பங்களை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே சமர்ப்பிக்குமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌ . விண்ணப்பதார்கள்‌ www.tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில்‌ மூலம்‌ விண்ணப்பிக்கலாம்‌.

மேலும்‌ விவரங்களுக்கு

தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகம்‌, கோயமுத்தூர்‌

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக கல்வி பாடங்களுக்கான விவரங்களை 0422-6611345, 0422-6611346, 9488635077, 9486425076 என்ற தொலைபேசி உதவிச்‌ சேவை எண்களிலும்‌ [email protected] என்ற மின்னஞ்சல்‌ மூலமாகவும்‌ வார நாட்களில்‌ காலை 9.00 மணியிலிருந்து மாலை 5 மணி வரை அறிந்து கொள்ளலாம்‌.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...