கோவை அருகே காதலன் கொலை - காதலி தூக்கிட்டு தற்கொலை!

கோவை செட்டிப்பாளையம் அருகே கடந்த 5ஆம் தேதி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறச் சென்ற காதலனை, பெண்ணின் உறவினர் வெட்டிக்கொலை செய்த நிலையில், தனது கண்முன்னே காதலன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் விரக்தியடைந்த காதலி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.



கோவை: கோவை சுந்தராபுரம் அருகே காதலன் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது காதலி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (21) இவர் செட்டிபாளையம் வசந்தம் நகர் பகுதியை சேர்ந்த தன்யா (20) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி தன்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூற அவரது வீட்டிற்குச் சென்ற பிரசாந்தை தன்யாவின் உறவினரான விக்னேஷ் (29), என்பவர் வெட்டிக்கொலை செய்தார். 

இதையடுத்து கொலை செய்த விக்னேஷை செட்டிபாளையம் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் 3 ஆண்டுகளாக பிரசாந்த் மற்றும் தன்யா இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் இருவர் மட்டும் தனியாக சென்று கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். 

இதையடுத்து பெரியோர்கள் முன்னிலையில் அடுத்த மாதம் திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், பிரசாந்த் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த தன்யா மறுநாள் இரவு திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் தன்யாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் வீடு திரும்பினார். 



இந்நிலையில் காதலி கண்முன்னே, காதலன் வெட்டி கொலை செய்யப்பட்டதால் விரக்தியடைந்த காதலி தன்யா நேற்று மாலை 3 மணியளவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக செட்டிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...