ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் துப்புரவு பணியிடங்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டும் விண்னப்பிக்க வேண்டும் என்ற அரசானையை கண்டித்து கோவையில் அரசானை நகலை எரித்து போராட்டம் மேற்கொண்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் காலியாக உள்ள 20 துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என சமீபத்தில் அரசானை வெளியிடப்பட்டது. இதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் எதிப்பு தெரிவித்துள்ளது.மேலும் இந்த அரசானை குலத்தொழிலுக்கு வழி வகுக்கும் என தெரிவித்து, அரசானை நகலை எரிக்கும் போராட்டம் கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு நடைபெற்றது.
கழக அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பினர் தொடர்ந்து போராட்டத்தின் போது அரசானையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை போலிசார் கைது செய்தனர். இது குறித்து அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி கூறுகையில் தாழ்த்தப்பட்ட மக்களை குலத்தொழிலுக்கு திரும்ப அழைக்கும் வகையில் இந்த அரசானை உள்ளதாகவும், இது திரும்ப பெறும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் காலியாக உள்ள 20 துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என சமீபத்தில் அரசானை வெளியிடப்பட்டது. இதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் எதிப்பு தெரிவித்துள்ளது.மேலும் இந்த அரசானை குலத்தொழிலுக்கு வழி வகுக்கும் என தெரிவித்து, அரசானை நகலை எரிக்கும் போராட்டம் கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு நடைபெற்றது.
கழக அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பினர் தொடர்ந்து போராட்டத்தின் போது அரசானையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை போலிசார் கைது செய்தனர். இது குறித்து அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி கூறுகையில் தாழ்த்தப்பட்ட மக்களை குலத்தொழிலுக்கு திரும்ப அழைக்கும் வகையில் இந்த அரசானை உள்ளதாகவும், இது திரும்ப பெறும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.