கோவை நவக்கரை பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன். இவர் சுந்தரபுரம் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இன்று மாலை மூன்றரை அளவில் மதுக்கரை மேம்பாலம் வழியாக தனது அலுவலகதிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது இரு சக்கர வாகனத்தின் பின்னால் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அவரிடம் இருந்த 1 லட்ச ரூபாய் பணம் மற்றும் 3 செல் போன்களை பறித்து அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இது குறித்து சுரேந்திரன் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். தொழில் போட்டியாளர்கள் அல்லது தொடர் வழிப்பறிகளில் ஈடுபடும் நபர்கள் இச்செயலில் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். சுந்தராபுரத்திலிருந்து மதுக்கரை மார்கெட் செல்லும் வழியில் வாகனங்கள் அடிக்கடி இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சுரேந்திரன் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். தொழில் போட்டியாளர்கள் அல்லது தொடர் வழிப்பறிகளில் ஈடுபடும் நபர்கள் இச்செயலில் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். சுந்தராபுரத்திலிருந்து மதுக்கரை மார்கெட் செல்லும் வழியில் வாகனங்கள் அடிக்கடி இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.