காஷ்மீர்‌ வேளாண்‌ பல்கலை. -‌ கோவை வேளாண் பல்கலை. இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

கோவை தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகம் மற்றும் ஜம்முவின்‌ ஷைர்‌-இ-காஷ்மீர்‌ வேளாண்‌ அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்ப‌ பல்கலைக்கழகம்‌ ‌இடையே ஸ்ரீநகரில் கடந்த மே 15ஆம் தேதி சாண்ட்விச்‌, ட்வின்னிங் திட்டத்தின்‌ கீழ்‌ முதுகலை மாணவர்களின்‌ ஆராய்ச்சியை எளிதாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ (MoU) கையெழுத்தானது.

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் காஷ்மீரில் உள்ள ஷைர்-இ-காஷ்மீர்‌ வேளாண்‌ அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுடன்‌ புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதுதொடர்பாக கோவை வேளாண் பல்கலை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகம் மற்றும் ஜம்முவின்‌ ஷைர்‌-இ-காஷமீர்‌ வேளாண்‌ அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்ப‌ பல்கலைக்கழகம்‌ ‌இடையே ஸ்ரீநகரில்‌ 15.05.2023 அன்று சாண்ட்விச்‌, ட்வின்னிங் திட்டத்தின்‌ கீழ்‌ முதுகலை மாணவர்களின்‌ ஆராய்ச்சியை எளிதாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ (MoU) கையெழுத்தானது.

முதன்மையாக இருவேறு நிறுவனங்களுக்கிடையய கல்வி மற்றும்‌ ஆராயச்சி ஒத்துழைப்பை வளர்ப்பது, சாண்ட்விச்‌, ட்வின்னிங்‌ திட்டத்தின்‌ மூலம்‌ முதுகலை மாணவர்கள்‌ பரிமாற்றத்தை‌ தொடங்குவது போன்ற அம்சங்களை இரு பல்கலைக்கழகங்களும்‌ கூட்டாக ஒப்புக்‌ கொண்டன.

இதில்‌ பங்குபெறும்‌ மாணவர்கள்‌ தங்கள்‌ பட்டப்படிப்பு பின்‌ ஒரு பகுதியை ஒரு பல்கலை கழகத்திலும்‌ மற்றொரு பகுதியை மற்றும்‌ ஒரு பல்கலை கழகத்திலும்‌ முடிக்க வேண்டும்‌.

இந்த ஒப்பந்தத்தில், தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக பதிவாளர்‌, முனைவர்‌ இரா. தமிழ்வேந்தன்‌,

ஜம்மு ஷைர்‌-இ-காஷ்மீ ர்‌ வேளாண்‌ அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்பப்‌ பல்கலைக்கழக பதிவாளர்‌, முனைவர்‌ சுஷில்குமார்‌ குப்தா மற்றும்‌ காஷ்மீர்‌ ஷைர்‌-இ-காஷ்மீ ர்‌ வேளாண்‌ அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்பப்‌ பல்கலைக்கழக பதிவாளர்‌, டி.எச்‌. மசூதி ஆகியோர்‌ மாணவர்களின்‌ நலனுக்கான ஒப்பந்தத்தில்‌ கையெழுத்திட்டனர்‌.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌ வெ.கீதாலட்சுமி, ஐம்மு மற்றும்‌ காஷ்மீரின்‌ ஷைர்‌-இ-காஷீமீர்‌ வேளாண்‌ அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்ப‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ பேராசிரியர்‌ நசீர் அகமது கனய் ஆகியோர்‌ முன்னிலையில்‌ இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தின்‌ முதுகலை பட்டமேற்படிப்பு பயிலக முதன்மையர்‌ முனைவர்‌ ந.செந்தில்‌, வேளாண்மை முதன்மையர்‌ முனைவர்‌ ந.வெங்கடேச பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளர்‌ (ஜஐடிபி) முனைவர்‌ எஸ்‌.டி. சிவக்குமார்‌ மற்றும்‌ இருதரப்புகளின்‌ பிரதிநிதிகளும்‌ இக்கையொப்பமிடும்‌ நிகழ்வில்‌ கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்‌.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...