கோவையில் இன்று முதல் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் - சுகாதாரத்துறை அறிவிப்பு!

கோவையில் இன்று முதல் வரும் 25ஆம் தேதி வரை தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா அறிவித்துள்ளார். அவரது அறிக்கையில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தீவிர வயிற்றுப்போக்கு பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வகையில் இந்த முகாம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கோவை: கோவையில் இன்று முதல் வரும் 25ஆம் தேதி வரை தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் 5 வயது குட்பட்ட குழந்தைகளின் இறப்பு 10 சதவீதம் வயிற்று போக்கினால் ஏற்படுகிறது. நிமோனியாவுக்கு அடுத்தபடியாக இது ஒரு பொது சுகாதார பிரச்சினை ஆகும். நம் நாட்டில் ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கினால் இறந்து போகிறார்கள். 

இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு இரு வார கால தீவிர வயிற்றுப் போக்கு தடுப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் வயிற்றுப் போக்கினால் ஏற்படும் மரணத்தை முற்றிலும் தவிர்ப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

இத்திட்டமானது கோவை மாவட்டத்தில் இன்று முதல் அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நடைபெறும்.

பொது சுகாதார துறை. பள்ளி கல்விதுறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட அனைத்து துறைகளை சார்ந்த களப்பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் இந்த பணியில் ஈடுபடுவார்கள். 

இம்முகாமில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சுகாதார செவிலியர்கள், சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை பயிற்றுவிப்பார்கள். ஐந்து வயதுக் குட்பட்ட குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு ஒரு ஓஆர்எஸ் பொட்டலம் (குழந்தைக்கு ஒன்று வீதம்) விநியோகிப்பார்கள். 

மேலும், வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளை கண்டுபிடித்து ஓஆர் எஸ் மற்றும் ஜிங்க் மாத்திரை அளித்து அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிந்துரை செய்வார்கள். இத்திட்டத்தின் மூலம் ஐந்து வயதுக்குட்பட்ட 3.17 லட்சம் குழந்தைகள் பயனடைய உள்ளனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...