திருப்பூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு - கருப்பு கொடி ஏந்தி போராட போவதாக மக்கள் அறிவிப்பு!

திருப்பூர் மாநகராட்சியின் 45ஆவது வார்டுக்குட்பட்ட காயிதே மில்லத் நகரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மேற்கொண்டு பணிகள் நடைபெற்று வரும் பட்சத்தில், கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

திருப்பூர்: திருப்பூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கருப்பு கொடி ஏந்தி போராட போவதாக அறிவித்துள்ளனர்.

திருப்பூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு சார்பாக வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாநகராட்சியில், 45வது வார்டுக்கு உட்பட்ட காயிதே மில்லத் நகர் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வந்த 130 குடும்பங்களை நீர்நிலை புறம்போக்கு இடத்தில் இருப்பதாக கூறி, அப்பகுதி வீடு கட்டுவதற்கு ஏற்ற தகுந்ததாக இல்லை என காரணம் காட்டி அவர்களை காலி செய்யப்பட்டனர்.

தற்போது அந்த இடத்தில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் தொடங்கியபோது அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 45வது வார்டு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்திய போதும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், அப்போதைய மாவட்ட ஆட்சியர் வினித், பொதுமக்கள் இத்திட்டத்திற்கு ஆதரவளித்து விட்டதாக தமிழக அரசிடம் தவறான கருத்தை தெரிவித்ததாக கூறுகின்றனர். இதனால், அப்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணியை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தொடர்ந்து வரும் நிலையில் 30 ஆயிரத்திற்கும் மேல் பொதுமக்கள் வசித்து வரக்கூடிய இப்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமையும் பட்சத்தில் இப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்.

இதனால், அதனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். மேற்கொண்டு பணிகள் நடக்குமேயானால் வருகின்ற திங்கட்கிழமை 45வது வார்டு பகுதி முழுவதும் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், மாநகராட்சி மேயர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இத்திட்டம் நிறைவேற்றப்படாது.

45வது வார்டு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை நிறுத்தும் வரை தங்களது போராட்டம் தொடரும்.

இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...