ஜூலை 6-ல் கோவையில் 59வது வெப்பமண்டல உயிரியல், பாதுகாப்பு சங்க சந்திப்பு!

59 வது வெப்பமண்டல உயிரியல் மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் வருடாந்திர சந்திப்பு கோவை குமரகுரு கல்லூரியில் வரும் ஜூலை 6ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தொழில் வல்லுனர்கள், இயற்கை ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

கோவை: கோவை குமரகுரு கல்லூரியில் 59 வது வெப்பமண்டல உயிரியல் மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் வருடாந்திர சந்திப்பு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்ப மண்டல உயிரியல் மற்றும் பாதுகாப்பு சங்கம் நிலப்பரப்பு, கடல் மற்றும் கடலோர நிலப்பரப்புகளில் உள்ள சிக்கல்களை கண்டறிதல். காடுகள், விவசாயம், காலநிலை மாற்றம் மற்றும் சுகாதார அணுகுமுறைகளை கையாளுதல் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இச்சங்கத்தின் 59 வது வருடாந்திர சந்திப்பு கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வருகிற ஜூலை 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை இயற்கை சூழலிகளுக்கான இந்திய பிராந்திய சங்கம், குமரகுரு நிறுவனங்கள் ஒருங்கிணைக்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் இந்திய வனவிலங்கு நிறுவனம், சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம், போபால் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், ஓசை பாதுகாப்பு மற்றும் ஊட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியோரும் இணைந்து ஒருங்கிணைக்க உள்ளனர்.

இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள குமரகுரு சிட்டி சென்டரில் நடைபெற்றது, இதில் செய்தியாளர்களை சந்தித்த இச்சங்கத்தினர் கூறியதாவது,

வெப்ப மண்டல உயிரியல் மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் உலகளாவிய சந்திப்பு இந்தியாவில் இரண்டாவது முறையாக, "அறிவியலின் சமநிலை தன்மை, பாதுகாப்பு மற்றும் சமூகம்" எனும் கருப்பொருளின் கீழ் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் தொழில் வல்லுனர்கள், இயற்கை ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

அந்நிகழ்வில் இயற்கை சார்ந்த செயல்களுக்கு முன்னுரிமை வழங்குதல், நீலகிரி உயிர்க்கோள காப்பக சுற்றுப்புறம், வெப்ப மண்டல சுற்றுச்சூழல் அமைப்புகள் பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியமான இடங்கள் மற்றும் உலகளாவிய காலநிலை தன்மை பராமரிப்பு பற்றிய கருத்தரங்கம் முக்கிய நிகழ்வாக அமைய உள்ளது.

இது போன்ற பலதரப்பட்ட பங்குதாரர்களை ஒன்றிணைப்பதன் மூலம் உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் கொள்கை உருவாக்கம் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நிகழ்வுகள் ஆகியவை தற்காலிக நிகழ்வுகளுக்கும் எதிர்கால தீர்வுகளுக்கும் உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...