வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் பிரதான சாலையில் உள்ள ரொட்டிக்கடை எஸ்டேட். இப்பகுதியில் வன விலங்குகளான காட்டெருமை, பன்றி, மான், குரங்கு, முயல் உள்ளிட்டவை இறை தேடி சாலையோரத்தில் உள்ள புல்வெளி பகுதிக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில் இன்று அதிகாலையில் ரொட்டிக்கடை எஸ்டேட் தோட்ட மருத்துவமனை அறுகாமையில் முள்ளம்பன்றி ஒன்று மூன்று குட்டிகளுடன் சாலையை கடக்க முற்பட்ட போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூன்று குட்டிகளும் உயிரிழந்தது. இதுகுறித்து வால்பாறை வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
