பாஜகவுக்கு திமுகவை பற்றி தெரியவில்லை - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சூசகம்!

கோவையில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று மக்களே சொல்கின்றனர். மத்திய அரசுக்கு திராவிட மாடல் அரசு சவாலாக இருப்பதால் இதுபோன்று பழிவாங்குகின்றனர். அவர்களுக்கு திமுகவை பற்றி தெரியவில்லை. நாங்கள் யாரென்று பாஜகவுக்கு முதல்வர் தெரியவைப்பார் என்றார்.



கோவை: பாஜகவுக்கு திமுகவை பற்றி தெரியவில்லை என்றும், நாங்கள் யாரென்று முதல்வர் பாஜகவுக்கு தெரியவைப்பார் எனவும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.



கோவையில் ஹோப் கல்லூரி அருகிலுள்ள டைடல் பார்க்கை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் பேசியதாவது, 







கோவைக்கு இன்னும் பல புதிய திட்டங்களை கொண்டு வர இருக்கிறோம். கோவையில் இன்னும் பல தொழில்கள் தொடங்க திட்டமிட்டிருக்கிறோம். அதற்கான நிலங்களை தேர்வு செய்து வருகிறோம். 

பிரபல லூலு நிறுவனத்தை தமிழகத்தில் நுழைய விட மாட்டேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இந்நிலையில் இன்று அந்த நிறுவனத்தை கோவையில் திறப்பது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் சொன்னார் நாங்கள் திறந்து வைக்கிறோம் என இதுபோன்று சிறுபிள்ளை தனமாக பேசுபவர்களுக்கு நான் பதிலளிக்க தேவையில்லை. 

மேலும் செந்தில்பாலாஜி கைது என்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. பாஜக இதுபோன்று சிறுபிள்ளை தனமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. திமுகவை பற்றி இன்னும் அவர்களுக்கு தெரியவில்லை. இது போன்ற பல முதலைகளை சந்தித்த இயக்கம் திமுக. 

இந்த அடக்குமுறையிலிருந்து மீண்டும் வலிமையோடு எழுந்து வெற்றி நடைபோடுவோம். திமுகவைக் அடக்க வேண்டுமென்று நினைத்தால் இன்னும் வேகமாக எழுவோம். இதுக்கெல்லாம் பயந்து போகின்ற இயக்கமில்லை. கைது நடவடிக்கையில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. 

பதவியில் இருக்கிறார்கள் என்று சிலர் ஆடுகின்றனர். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று மக்களே சொல்கின்றனர். மத்திய அரசுக்கு திராவிட மாடல் அரசு சவாலாக இருக்கிறது என்பதால் அவர்களிடம் உள்ள துறையை ஏவிவிட்டு இது போன்று பழிவாங்குகின்றனர். அவர்களுக்கு திமுகவை பற்றி தெரியவில்லை. முதல்வர் நாங்கள் யாரென்று பாஜகவுக்கு தெரியவைப்பார். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...