கோவை மாவட்டம் அரசினர் மகளிர் பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜுனன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா மற்றும் அக்கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.