பெட்ரோல் மற்றும் டீசலுக்கு ஏற்கனவே மத்திய மற்றும் மாநில அரசுகள் வரி விதித்துள்ள நிலையில் தற்போது மாநில அரசின் சார்பில் மீண்டும் மதிப்பு கூட்டு வரி (VAT) சேர்க்கப்பட்டுள்ளது.
பொதுவாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலையில் ஏற்படும் மாற்றத்தால் அவ்வப்போது எரிபொருட்களின் விலை திடீரென அதிகரிப்பதும், சிறிது குறைவதுமாக இருந்துவருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள இந்த மதிப்பு கூட்டு வரியால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.77-ம் டீசல் விலை ரூ.1.76-ம் அதிகரித்துள்ளது. அதன்படி, தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.74.41-க்கும், டீசல் ரூ.62.57-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டுவரி 27 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி 21.43 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகவும் உயர்த்தபட்டுள்ளது.
மாநில அரசின் இந்த திடீர் முடிவால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.