கோவை தெற்கு எம்.எல்.ஏ. அலுவலகத்திற்குள் புகுந்த நபர் உடலில் ஓம் சிவா என்ற பச்சை உள்ளது!

கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் 2 நாட்களுக்கு முன்பு புகுந்த மர்ம நபர் உள்பக்கமாக பூட்ட முயன்றார். அவரை அங்கிருந்தவர்கள் வெளியில் அனுப்பியை நிலையில், அவர் பேருந்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது உடலில் ஓம் சிவா என பச்சை குத்தியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.



கோவை: கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்குள் நுழைந்த மர்ம நபர், தனது உடலில் ஓம் சிவா என பச்சை குத்தி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.



கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்குள் கடந்த திங்கட்கிழமை இளைஞர் ஒருவர் புகுந்து உட்புறமாக பூட்ட முயன்றார். 



அவரை எம்.எல்.ஏ வானதி சீனிவாசனின் உதவியாளர் விஜயன் என்பவர் அடித்து விரட்டினார். 



அதனை தொடர்ந்து சில நிமிடங்களிலேயே அண்ணா சிலை ஜி.டி.மியுசியம் அருகே அந்த நபர், அரசு பேருந்தின் பின்சக்கரத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் வானதி சீனிவாசன் சட்டமன்ற அலுவலகத்திற்குள் நுழைந்தது, தற்கொலை செய்து கொள்வது போன்ற சிசிடிவி காட்சிகள் அனைத்தும் காவல்துறையினரால் கைப்பற்றபட்டது.

இதனிடையே அலுவலகத்துக்குள் நுழைந்த நபர் யார் என்பது குறித்தும், என்ன நோக்கத்திற்காக நுழைந்தார் என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தி இருந்தார். 



இந்நிலையில் இறந்த நபரை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அவர் தனது நெஞ்சில் ஓம் சிவா என பச்சை குத்தி இருப்பது தெரியவந்துள்ளது. அலுவலகத்துக்குள் நுழைந்த நபர் மலையாளத்தில் பேசினார் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த நபர் யார் என்பது குறித்து பந்தயசாலை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....