'நமது வார்டும் நமது வீடே' 27வது வார்டில் குழந்தைகளின் நல வாழ்விற்காக வாரம் ஒரு மணிநேரம் சேவை


'நமது வார்டும் நமது வீடே' என்னும் தலைப்பில் 27வது வார்டு, சின்னவேடம்பட்டியில் நம் குழந்தைகளின் நல வாழ்விற்காக வாரம் ஒரு மணிநேரம் சேவை என்ற முறையில் பொதுநல திட்டத்தை மண்டல சுகாதார அலுவலர் அருணகிரி தலைமையில் இன்று காலை 8:30 மணியளவில் துவங்கியது.



இதில் சுகாதார ஆய்வாளர் முருகா, சுகாதார கண்காணிப்பாளர் சம்பத் ஆகியோர் பங்கேற்றனர். 



இந்நிகழ்ச்சியின் ஆரம்பமாக சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகர் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டு நிகழ்ச்சி இனிதே துவங்கியது.



இதுகுறித்து இதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், நமது வார்டும் நமது வீடே என்ற தலைப்பின் முக்கிய நோக்கமாக இன்றைய காலகட்டத்தில் நிலமும், நீரும், காற்றும் மசுபட்டு வருவதால் நமது குழந்தை மற்றும் சந்ததிகளின் உடல் நலமும், எதிர்காலமும் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுநல மனப்பான்மையுடன் நாம் ஒன்றிணைந்து வாரம் ஒரு மணிநேரம் நமது வார்டில் சேவை செய்வதன் மூலம் நம் சந்ததிகளின் காலமும் பொற்காலமாகும் என்பதற்காகவே வாரம் ஒரு மணிநேரம் சேவை பொது நல திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.



அதில் 27-வது வார்டு சின்னவேடம்பட்டி பகுதியில் இந்த பொதுநல திட்டத்தின் மூலம் மற்ற வார்டுகளுக்கும் இத்திட்டம் முன்மாதிரியாக விளங்குகிறது. தொடர்ந்து, இந்நிகழ்வு குறித்து விழாவில் பங்கேற்ற பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டது என்றனர்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...