'நமது வார்டும் நமது வீடே' என்னும் தலைப்பில் 27வது வார்டு, சின்னவேடம்பட்டியில் நம் குழந்தைகளின் நல வாழ்விற்காக வாரம் ஒரு மணிநேரம் சேவை என்ற முறையில் பொதுநல திட்டத்தை மண்டல சுகாதார அலுவலர் அருணகிரி தலைமையில் இன்று காலை 8:30 மணியளவில் துவங்கியது.

இதில் சுகாதார ஆய்வாளர் முருகா, சுகாதார கண்காணிப்பாளர் சம்பத் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியின் ஆரம்பமாக சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகர் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டு நிகழ்ச்சி இனிதே துவங்கியது.

இதுகுறித்து இதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், நமது வார்டும் நமது வீடே என்ற தலைப்பின் முக்கிய நோக்கமாக இன்றைய காலகட்டத்தில் நிலமும், நீரும், காற்றும் மசுபட்டு வருவதால் நமது குழந்தை மற்றும் சந்ததிகளின் உடல் நலமும், எதிர்காலமும் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுநல மனப்பான்மையுடன் நாம் ஒன்றிணைந்து வாரம் ஒரு மணிநேரம் நமது வார்டில் சேவை செய்வதன் மூலம் நம் சந்ததிகளின் காலமும் பொற்காலமாகும் என்பதற்காகவே வாரம் ஒரு மணிநேரம் சேவை பொது நல திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அதில் 27-வது வார்டு சின்னவேடம்பட்டி பகுதியில் இந்த பொதுநல திட்டத்தின் மூலம் மற்ற வார்டுகளுக்கும் இத்திட்டம் முன்மாதிரியாக விளங்குகிறது. தொடர்ந்து, இந்நிகழ்வு குறித்து விழாவில் பங்கேற்ற பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டது என்றனர்.
