மாணவர்களுக்கு கல்வி தொகை வழங்குவதாக கூறி மோசடி - 5 பேர் கைது!

10, பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்களை குறிவைத்து, அரசு கல்வி உதவி பெற்று தருவதாக கூறி 500க்கும் மேற்பட்டோரிடம் கோடி கணக்கில் மோசடி செய்த சவுரிபாளையம் பகுதியை சேர்ந்த டேவிட் (32), லாரன்ஸா (28), ஜமேஷ் (30), எட்வின் சகாயராஜ் (31), மாணிக்கம் (34) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.



கோவை: கோவையில் பள்ளி மாணவர்களுக்கு அரசு மூலம் கல்வி உதவி தொகை வழங்குவதாக கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு மூலம் கல்வி உதவி தொகை வழங்குவதாக கூறி ஏழை எளிய மாணவர்களின் பெற்றோர்களை குறி வைத்து பணத்தை மோசடி செய்து வருவதாக கோவை சைபர் கிரைம் போலீசாருக்கு அடுத்தடுத்து 7 புகார்கள் வந்துள்ளது.

இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் ஆய்வாளர் அருண் தலைமையில் தனிப்படை அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.



தொடர் கண்காணிப்பில் இருந்த நிலையில் ரகசிய தகவல் மற்றும் செல்போன் சிக்னல் அடிப்படையில் நாமக்கல் மாவட்டம் சவுரிபாளையம் பகுதியை சேர்ந்த டேவிட் (32), லாரன்ஸா (28), ஜமேஷ் (30), எட்வின் சகாயராஜ் (31), மாணிக்கம் (34) ஆகிய 5 பேரை மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. பிடிபட்ட 5 பேரும் ஒரே பகுதியை சேர்ந்த, பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, நண்பர் மூலம் டெல்லி சென்று எப்படியெல்லாம் மோசடி செய்யலாம் என பயிற்சி எடுத்துக் கொண்டு தமிழகத்திற்கு வந்துள்ளனர்.

இணையம் மூலமாக அண்மையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண் உள்ளிட்ட தகவல்களை திருடி அதை வைத்து அவர்களுக்கு வாட்ஸ் அப் மற்றும் சாதாரண அழைப்புகள் மூலம் அழைத்து, அவர்களது குழந்தைக்கு தமிழக அரசின் சார்பில் கல்வி உதவி தொகை வந்துள்ளதாகவும், அதனை வங்கி கணக்கிற்கு அனுப்பியாச்சு எனக்கூறி போலியான ஸ்கிரீன் ஷாட்டை அனுப்புகின்றனர்.

மேலும் அதனை பதிவு செய்ய QR code அனுப்பியுள்ளதாக கூறி அதனை ஸ்கேன் செய்யுமாறு கூறுகின்றனர். அதனை அப்பாவி மக்கள் நம்பி ஸ்கேன் செய்யும் போது அவர்களது வங்கி கணக்கு விபரங்கள் அனைத்தும் இந்த இளைஞர்கள் எடுத்து விடுகின்றனர். மேலும் அதனை வைத்து சுமார் ஆயிரம் முதல் வங்கியில் உள்ள அனைத்து தொகையையும் எடுத்து கொள்கின்றனர்.

பெரும்பாலும் ஏழை எளிய படிப்பறிவு இல்லாத பெற்றோர்களுக்கு பணம் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது கூட தெரியாமல் இருந்துள்ளனர்.  மேலும் மோசடி கும்பல் மக்களை நம்ப வைக்க அரசு லோகோவையும் பயன்படுத்தியுள்ளனர்.

கோவையை சேர்ந்தவர்களிடம் மட்டும் ரூ.7 லட்சம் மோசடி செய்துள்ளதும், இதுவரை கிடைத்த தகவல் அடிப்படையில் 500 பேரிடம் இவ்வாறு மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த பணத்தை ஆடம்பரமாக செலவு செய்து மொத்தமாக அழித்துள்ளனர்.

தற்போது பள்ளி சீசன் என்பதால் அதனை பயன்படுத்திய கும்பல் அடுத்த மோசடிக்கும் தயாராகி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.



மேலும் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 44 செல்போன்கள், 22 சிம்கார்டுகள், 7 வங்கி கணக்கு புத்தகம், ஒரு காசோலை, 7 ஏ.டி.எம் கார்டுகள், ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



பொதுமக்கள் அரசு கல்வி தொகை, அரசு சலுகைகள் வழங்குவதாக கூறி செல்போனுக்கு அழைப்பு வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...