கோவையில் 5 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் பொதுக் கழிப்பிடத்தை மீண்டும் திறக்க வேண்டும் - பாமக மனு!

கோவை ஆலாந்துறை அடுத்த முகாசிமங்கலம் கிராமத்தில் 5 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டுள்ள பொது கழிப்பிடத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி கோவை மாவட்ட பாமக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



கோவை: கோவை மாவட்ட ஆலாந்துறை அருகே 5 ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ள பொதுக்கழிப்பிடத்தை திறக்க வலியுறுத்தி பாமக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.



கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியம் ஆலாந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட முகாசிமங்கலம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும் அதிக அளவில் உள்ளனர்.



இந்த கிராமத்தில் ஏற்கனவே இருந்த பொதுக்கழிப்பிடம் ஐந்து ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த பகுதியில் கழிப்பிட வசதியின்றி முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் வனத்தை ஒட்டிய பகுதிகளில் மிகுந்த அச்சத்துடன் உயிருக்கு பயந்து இயற்கை உபாதைகளை கழிக்க சென்று வருவதாக கிராம மக்கள் தெரிவித்து வருகின்றனர்.



எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சனையில் தலையிட்டு பொதுக் கழிப்பிட வசதிக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோவை மாவட்ட பாமக சார்பில் கோவை மாவட்டம் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...