கோவையில் 5 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் பொதுக் கழிப்பிடத்தை மீண்டும் திறக்க வேண்டும் - பாமக மனு!

கோவை ஆலாந்துறை அடுத்த முகாசிமங்கலம் கிராமத்தில் 5 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டுள்ள பொது கழிப்பிடத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி கோவை மாவட்ட பாமக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



கோவை: கோவை மாவட்ட ஆலாந்துறை அருகே 5 ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ள பொதுக்கழிப்பிடத்தை திறக்க வலியுறுத்தி பாமக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.



கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியம் ஆலாந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட முகாசிமங்கலம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும் அதிக அளவில் உள்ளனர்.



இந்த கிராமத்தில் ஏற்கனவே இருந்த பொதுக்கழிப்பிடம் ஐந்து ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த பகுதியில் கழிப்பிட வசதியின்றி முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் வனத்தை ஒட்டிய பகுதிகளில் மிகுந்த அச்சத்துடன் உயிருக்கு பயந்து இயற்கை உபாதைகளை கழிக்க சென்று வருவதாக கிராம மக்கள் தெரிவித்து வருகின்றனர்.



எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சனையில் தலையிட்டு பொதுக் கழிப்பிட வசதிக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோவை மாவட்ட பாமக சார்பில் கோவை மாவட்டம் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...